TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

சென்டிரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு.

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்டிரல் பேங்க் ஆப் இந்தியாவில் நிரப்பப்பட உள்ள 61 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி தரத்திலான கிரெடிட் ஆபீசர், மற்றும் ரிஸ்க் மேனேஜர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயதுவரம்பு: 30.09.2016 தேதியின்படி 20 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கிரெடிட் ஆபீசர் பணிக்கும் விண்ணப்பிப்பவர்கள் நிதியியல் துறையில் எம்.பி.ஏ. படிப்புடன் நிதி சார்ந்த டிப்ளமோ மற்றும் சி.ஏ.முடித்திருக்க வேண்டும். பொறியியல் துறையில் பி.டெக், எம்.சி.ஏ, எம்.பி.ஏ.(நிதி), எம்.எஸ்சி. கணிதம், எம்.எஸ்சி. புள்ளியியல் முடித்தவர்கள் ரிஸ்க் மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.50.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www:centralbankofindia.co.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2016
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: உத்தேசிக்கமாக 04.11.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www:centralbankofindia.co.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment